காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பினால் அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை எனவும் அவர்களின் உடல்நிலை மோசமாகிவிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லை எனவும் மாணவர்களை வீட்டில் வைத்து ஓய்வெடுக்க அனுமதிப்பது சிறந்த வழி எனவும் அவர் கூறியுள்ளார்.