பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம்-மைத்திரியிடம் கோரிக்கை!

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய குறித்த பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானம் நிறைவேற்று மற்றும் மத்திய குழு கூட்டங்களில் அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.