விளையாட்டு அமைச்சருடன் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், பயிற்சித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டிருப்பதோடு இந்த சந்திப்பில் கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜயசூரிய, தேர்வுக் குழு தலைவர் உபுல் தரங்க, இலங்கை ஒருநாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், இருபதுக்கு 20 தலைவர் வனிந்து ஹசரங்க, ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 உப தலைவர் சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.