டீசல் தட்டுப்பாடு- பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் நிலைமை!

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு சில நாட்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார் .