போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலைத் தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுவதாகவும் மக்கள் முகாம்களுக்குள் சென்று மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் இந்த போர்நிறுத்த மீறலுக்கு வலுவான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக அதிக தீவிரம் கொண்ட தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய இராணுவத்தினரை அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த சில மணிநேரங்களில் இஸ்ரேலை நோக்கி எந்த ஏவுகணைகளையும் வீசவில்லை என்று ஈரானின் ஆயுதப்படையினர் தெரிவித்துள்ளனர்.
--