சுகாதார அமைச்சில் இருந்து வெளியேற மறுக்கும் டெங்கு தடுப்பு உதவியாளர்கள்

சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நேற்று பலவந்தமாக பிரவேசித்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை அங்கிருந்து செல்ல மறுத்துள்ளதாக அகில இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் டி.ஏ.சுரங்க தர்ஷன, சுகாதார அமைச்சின் வளாகத்தில் குழுவொன்று தொடர்ந்தும் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெங்கு தடுப்பு உதவியாளர்களாக ஐந்து வருடங்களாக கடமையாற்றிய போதிலும் சுகாதார அமைச்சினால் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.