எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்தறை, மஹியங்கனை, மொனராகலை, நொச்சியாகம மற்றும் காலி ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியின் வத்துகெதர பிரதேசத்தில் டிப்பர் பாரவூர்தி சாரதிகள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை – பசறை 3ஆம் தூண் பகுதியில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.