ஜனாதிபதி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் : பஸ் , ஜீப் ,மோட்டார் சைக்கிள்கள்கள் தீக்கிரை 45 பேர் கைது, 5 பொலிஸார், ஒரு ஊடகவியலாளர் காயம்


நுகேகொடை, மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு ஊடகவியலாளர் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.