ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் கட்டார்

ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான கட்டார் தகுதி பெற்றுள்ளது.

கட்டார் அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில்  நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஈரானுடனான அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு கட்டார்தகுதி பெற்றுள்ளது.

கட்டாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜப்பானை 3 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு கட்டார் ஆசிய சம்பியனாகி இருந்தது.