மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக முடிவு!

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.இதற்கமைய தரவுகள் சேகரிக்கப்பட்டு மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.