சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க முடிவு!

இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அவர்களின் வீசாக்களை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது இலங்கையில் 11,463 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் 3,993 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளும் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.