உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதமர் பணித்துள்ளதோடு,  கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவற்றை கையகப்படுத்த  பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.