யாழில் கொடூரம் - காணொளிகளை காண்பித்து 7 வயது மகள் வன்புணர்வு..! தந்தை கைது:

 

சாவகச்சேரி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமியின் பேர்த்தியார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 நாட்களுக்கு முன்னர் தந்தை தனது 7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளாரென குறித்த சிறுமியின் பேர்த்தியரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக காவல்துறையினர் விசாரணையில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதைக்கு அடிமையான அவர் ஆபாச காணொளிகளை வற்புறுத்தி காண்பித்து வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.