பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவரின் மனைவி  2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். இவரின் நினைவாக ஆண்டுதோறும் சிட்னி கிரிக்கெட் பிங்க் டெஸ்ட் விளையாடப்படும். இந்த டெஸ்ட் ஆட்டத்தின் மூலம்,மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்படும். இந்த நிதியானது புற்றுநோயால் வாடுபவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும்  பயன்படுத்தப்படும்இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் ஜோன் மெக்ராத் தினம் என அழைக்கப்படும். இந்த போட்டி புதன் கிழமை தொடங்குகின்றது . இதன் போது   கிளன் மெக்ராத் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் இப்போட்டியை காணொலி வாயிலாக பங்கேற்கின்றார் என தெரிகின்றது.