உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை



சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட்19 அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையிலுள்ள வர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட் ணசிங்கம் தெரிவித்தார்.

சில நாடுகளில் கொவிட்19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் , இலங்கையின் நிலவரம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், ஹொங்ஹொங் உள்ளிட்ட நாடுகளில் கொவிட்19 தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளது. ஜனவரி இறுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு கொவிட்19 பரவல் மேலும் அதிகரிக்கக் கூடுமென எதிர்பார்க்கப் படுகிறது. இதன் தாக்கம் ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கொவிட்19 தொற்று சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. எவ்வாறிருப்பினும் தொற்று அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

எனவே, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தற்போது கொவிட்19 தொற்று மாத்திரமின்றி டெங்கு, இன்பளூவன்சா மற்றும் வாயு மாசடைவினால் ஏற்படக் கூடிய சுவாச நோயென பல பிரச்சினைகள் காணப்படு கின்றன. எனவே, நோயாளர்கள் மாத்திரமின்றி, சுகதேகிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின் பற்ற வேண்டியது அவசியமா கும்.

தற்போது நாட்டில் சில பரிசோதனைகளை முன்னெ டுப்பதற்கான வசதிகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே கொவிட்19 அச்சுறுத் தல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து தரப் பினரையும் கேட்டுக் கொள் கின்றோம் என்றார்.