ராஜித சேனாரத்னவிற்கு கோவிட் தொற்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அத்தோடு மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பைப் பேணியவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.