இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கோவிட் தொற்று!

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை நாட்டில் இதுவரையில் 40ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.