சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கோவிட் மரணம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட்  மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.  

கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையை லங்காசிறி செய்திப் பிரிவினர் தொடர்பு கொண்ட போது வைத்தியசாலை தரப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.  

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் கோவிட் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து  இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்தநிலையில், உயிரிழந்த குறித்த நபர் கோவிட் தொற்றால் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது