கொரோனா அச்சம்-சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை தூதரகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலக வளாகத்தை சுத்தம் செய்து வருவதால் அலுவலக ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்கமாட்டார்களென்றும் இதன்காரணமாக 5ம் திகதி வரை அலுவலகம் பார்வையாளர்களுக்காக மூடப்படும் என்று சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.எனவே அனைத்து பார்வையாளர்களும் ஜனவரி 6ம் திகதி முதல் வருகை தரும் முன்னர் தூதரகத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.