தொடரும் சீரற்ற வானிலை-ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .இதேவேளை அனர்த்தங்கள் நிகழுமாயின்  117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக  அறிவிக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது .இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.