அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சரிசி போன்றவை அவற்றில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.அவற்றில் ஒருசில கொள்கலன்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.