இலங்கைக்கு வரவுள்ள டீசல் பெட்ரோல்-திகதி அறிவிப்பு!

இரண்டு டீசல் கப்பல்கள் ஜூலை 8-9 மற்றும் 11-14 ஆகிய திகதிகளுக்கு இடையில் வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜூலை 22-23க்குள் பெட்ரோல் கிடைக்கும் என்றும் CEYPETCO க்கு ஜூலை 22 அல்லது 23 அன்று டீசல் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதற்கிடையில், டீசல் மற்றும் பெட்ரோலின் மூன்று கப்பலால் ஜூலை 13/14 மற்றும் ஜூலை 28/30 மற்றும் ஓகஸ்ட் 10/15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடையும் என முன்னதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.