இலங்கையில் உருவெடுக்கும் புதிய ஆட்கொல்லி நோய் - கொழும்பில் ஒருவர் அடையாளம்

மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே.எம்.குணதிலக்க தெரிவித்த போது, குறித்த நபர் பணிபுரிந்த இடத்தில் சுமார் 30 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக கூறினார்.

அதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ, இந்த பக்டீரியா தொற்றுக்குள்ளானர்களை இனங்காணுவது மிகவும் அவசியமானது என்றார்.

அத்துடன் காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்கானப்பட்டதுடன் பல கைதிகள் உயிரிழந்துள்ளனர்.