அதிரடி படையினர் எனக்கூறி லட்சக்காண பணம் கொள்ளை!


பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் மகிழுந்தொன்றை நிறுத்தி விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எனக் கூறி உந்துருளியில் வந்த இருவர் மகிழுந்தை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது மகிழுந்தின் உரிமையாளரிடம் 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

உந்துருளியில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் மகிழுந்து உரிமையாளரும் மற்றுமொரு நபரும் இணைந்து தப்பியோடிய நபரை பொன்சேகா வீதியில் வைத்து பிடித்து பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.