கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ள நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து உடனடியாக குறித்த குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.