பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.

பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அதனை முழுமையாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் கையெழுத்து போரட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 இந்நிலையில் நேற்று குறித்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கையொப்பமிட்டனர்.

முன்னதாக கொழும்பில் இந்த வாரம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.