சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அத்தோடு இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.