திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

அக்குரஸ்ஸ பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது,

"அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரே திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள, நிலையில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

இரண்டு நண்பர்களைச் சந்திப்பதற்காக கார் சாரதி அந்தப் பகுதிக்கு சென்ற போது, ​​கார் சதுப்பு நிலத்தில் சிக்கி முன்னோக்கிப் பின்னோக்கி நகர முடியாமல் சிக்கியுள்ளது.

இந்நிலையில், சாரதி காரை வேகமாகத் திரும்பிச் செல்ல முற்பட்ட போது காரின் கதவு பூட்டுகள் அனைத்தும் பூட்டப்பட்டதாகவும், முன்பக்கத்தில் திடீரென பெரும் தீ பரவல் ஏற்பட்டதாகவும் சாரதி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிஷ்டவசமாக குறித்த விபத்தில் எந்த விதமான காயங்கங்களும் ஏற்படாமல் மயிரிழையில் சாரதி உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது."