நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்து படையினருக்கும் அழைப்பு - அதிபர் ரணில் அதிரடி உத்தரவு!


நாடு பூராகவும் உள்ள அனைத்து படையினரையும் அழைக்குமாறு இலங்கை அதிபர் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் குறித்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஏற்பாடுகள் காரணமாக நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவிற்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை விடுத்துள்ளார்.