ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கமைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதேநேரம் சமுர்த்திப் பயனாளிகள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.