சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்துவந்த பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய கணினியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரை உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணப் படங்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சிறுமிகளின் நிர்வாணப் படங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசமான செயல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகமையைச் சுற்றியுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களின் தொகுப்பை மொத்த விற்பனைக்கு வழங்கி வருவதுடன், கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெறுவதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதன்படி, சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நேற்று ராகம பகுதிக்குச் சென்றபோது, அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இருந்து இந்த மோசடி இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.
குறித்த விகாரையை சோதனை செய்ததில், அங்கிருந்த 19 வயதுடைய பிக்கு ஒருவரே குறித்த நிர்வாணப் புகைப்படம் மற்றும் காணொளிளை விற்பனை செய்தமை தெரியவந்தது.
அவர்களில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.