தலைகுப்புற கவிழ்ந்தார் புத்தர்..!


கடந்த காலங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள வழிபட்டுத்தலங்கள் மீதான அத்துமீறல்கள் வலுவாக அதிகரித்திருந்தது.

இந்தநிலையில், தற்போது புத்தர் சிலை ஒன்றின் மீது கை வைக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின், இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் விகாரையின் கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள, தமிழ் மக்களின் புராதன வழிபாட்டுத்தலங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தாலும், தென் பகுதியில் உள்ள பெரும்பாலான பெளத்த விகாரைகள் மற்றும் அங்குள்ள சிலைகள் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாப்பாகவே இருந்து வந்தன.

இப்படி இருக்கையில் நேற்றைய தினம் புத்தர் சிலையை கவிழ்த்துள்ள சம்பவமானது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், புத்தர் சிலைக்கு எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.