பறிபோகுமா ஜோ பைடனின் பதவி! விசாரணைக்கு அனுமதி

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை அதிபர் பதிவியில் இருந்து நீக்குவதற்கான பதவிநீக்க விசாரனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரின் தொழில் முறைகேடுகள் தொடா்பாக, அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையே முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கீழவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பைடனின் பதவியோ, அல்லது எதிர்வரும் அதிபா் தோ்தலில் அவா் போட்டியிடுவதோ பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.