அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் திரண்ட பிக்குகள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பித்துள்ளனர்.

ஒன்பதாம் திகதி சுற்றிவளைப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் வத்தளை பகுதியிலும் பிக்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல்கலைக்கழக ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இதனையடுத்து, கொழும்பில் பாதுகாப்பது பலப்படுத்தப்பட்டு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.