ஒட்டகங்கள் பங்கேற்ற அழகுப்போட்டி திருவிழா...

பாலைவனத்தின் கப்பல் என்று போற்றப்படும் ஒட்டகங்கள் பங்கேற்ற திருவிழா, ஐக்கிய அரபு இராஜியத்தில் நடைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற உரிமையாளர்கள், ஒட்டகத்தின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், பாலைவன வாழ்க்கை முற்றிலும் கடினமாக இருந்திருக்கும் என்பதை இளம் தலைமுறையினருக்கு புரிய வைக்கவே திருவிழா நடத்தப்பட்டதாக கூறினர்.

தாங்கள் வளர்க்கும் ஒட்டகத்துடன் பயணித்த அவர்கள், அவற்றின் ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை பறைசாற்றினர்.

மேலும் ஒட்டக உரிமையாளர்கள் இதன்போது நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.