விழிப்பாக இருக்கவும் - யாழ். குடா நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்


யாழ். குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் காவல்துறை பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

எனினும் இன்று வரை நான்கிற்கு மேற்பட்ட முறைப்பாடுகளே பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று 20 லட்சம் ரூபாயிற்கு அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நெல்லியடி பகுதியில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இதனால் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.