பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியா பயணம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் அடுத்த வாரம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைகாணொளி தொழிநுட்பத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியிருந்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்தது.

இந்தநிலையில், கடந்த 8ம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் பசில் ராஜபக்ஸ அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.