பொதுஜன பெரமுன எம்.பிக்களுக்கு பசில் போட்ட கண்டிப்பான உத்தரவு

எதிர்வரும் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில், பிரசார நடவடிக்கைகளில் மற்ற கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என கட்சி எம்.பி.க்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசித்து கட்சி எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த பசில் ராஜபக்ச, மேலும் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டால் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.