பசில் மிகப்பெரும் தீயசக்தி! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சீற்றம்

பசில் ராஜபக்ச நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் என்றும் நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்  தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விடயங்கள் கூட தற்போது இல்லாமல் போயுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியவர்களை மக்கள் சபிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.