க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.மேலும் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.இதேநேரம் 2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது.