இலங்கை எனது இரண்டாவது தாயகம் - பாகிஸ்தான் அணி தலைவர் புகழாரம்

இலங்கை தற்போது தனது இரண்டாவது தாயகம் போன்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கு முன்னதாக பாபர் அசாம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கை இப்போது எனது இரண்டாவது தாயகமாக உணர்கிறேன்.

நான் சில மாதங்கள் இங்கு இருக்கிறேன். இங்கே இலங்கைக்கு எதிராக டெஸ்ட் விளையாடியது, பிறகு LPL விளையாடியது, இப்போது ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை இங்கே உள்ளது.

இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றேன் என தெரிவித்துள்ளார்.