தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை தகர்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார். 

அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 100வது போட்டியில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்படாத சிறந்த பந்துவீச்சாக இது மாறியது

128 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் அஸ்வின், தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் படைத்திருந்த 141 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை தகர்த்து அசத்தியுள்ளார்.

இதேவேளை இந்தியாவிற்கு அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து 36 முறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் அஸ்வின்.