இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முழுவதுமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் என்பன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம்பி இருக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மையான அபிவிருத்தி திட்டங்கள் மோடியை நம்பியே இருக்கின்றன. இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.