சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கமைய 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.