நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில்-ஜனாதிபதி கோட்டாபய!

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40வது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.