பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடிய அதிபர், ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது.
திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென உறுதியளித்துள்ளார்.
அத்தோடு, ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி நாடாளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.