நாட்டுக்கு வரவுள்ள மற்றுமொரு சொகுசு கப்பல்!

Mein Schiff 5 சொகுசு கப்பலை தொடர்ந்து மற்றுமொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு வரும் MV Azamara Quest கப்பல் இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Mein Schiff 5 இல் இருந்த பயணிகள் யால தேசிய பூங்கா உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் பல இடங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது,