சஜித் பசில் இடையில் ஒப்பந்தம்.. ரணிலுடன் கைகோர்க்கும் மற்றுமொரு முக்கிய புள்ளி



ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43 ஆவது படைப் பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சையாக செயற்பட தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சம்பிக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சம்பிக்க உள்ளிட்ட 43ஆவது படைப் பிரிவு பகிரங்கமாக ரணிலுடன் இணையவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த காலங்களில் சம்பிக்கவும் ரணிலும் அவ்வப்போது பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடியுள்ளனர்