அநுர அரசு மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : வெளிநாட்டில் மேலும் கைதான 14 பாதாள குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு என தகவல்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களைச் சேர்ந்த 72 பேரை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதேநேரம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 14 பேர் சில நாடுகளில் கைதாகியுள்ளதுடன், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த குழுக்களின் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களாகும். இவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். இவர்கள் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படிஅவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்
இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன்,இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும்,ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் டி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாளகுழுக்களின் உறுப்பினர்கள் டுபாய்,இத்தாலி,பிரான்ஸ்,சுவிஸ்ர்லாந்து,கனடா,இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள்.
இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு,பாதுகாப்பு அமைச்சு,வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது என்றார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களைச் சேர்ந்த 72 பேரை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதேநேரம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 14 பேர் சில நாடுகளில் கைதாகியுள்ளதுடன், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த குழுக்களின் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களாகும். இவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். இவர்கள் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படிஅவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்
இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன்,இச்சம்பவங்
அத்துடன் டி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாளகுழுக்களின் உறுப்பினர்கள் டுபாய்,இத்தாலி,பிரான்ஸ்,சுவிஸ்
இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு,பாதுகாப்பு அமைச்சு,வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது என்றார்.