கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு!

கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு ஜூலை 21ம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் .இதேவேளை பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்து நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது .